1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

கோஷ்டி மோதல் – நெல்லியடியில் 15 பேர் கைது!

Share

இரண்டு கோஷ்டிகளுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள இராஜ கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு இரண்டு குழுக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளன.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாகவே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...