24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

Share

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. படகுப் பாதையை கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் (Backhoe) இயந்திரம் தடம்புரண்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (ஒக் 27) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை கடலுக்குள் இறக்குவதற்காகப் பொக்லைன் இயந்திரம் முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து இந்தப் புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைத்தமையும் இந்த நிகழ்வின்போது பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...