yuiu
இலங்கைசெய்திகள்

திலீபன் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு!

Share

திலீபன் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு!

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நிறைவேந்தலை நினைவுகூர மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றால் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை மேஜர், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதார நடவடிக்கைகளை நாட்டு மக்கள் கடைப்பிடித்தல் அவசியம்.

இவ்வாறான சூழலில் நினைவுகூரல் நடவடிக்கை தேவையற்ற ஒன்று என காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தடை உத்தரவு கோரிக்கை மன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பொலிஸாரால் மன்றுக்கு கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பொலிஸார் குறித்த இடத்தில் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற தடை உத்தரவை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...