Army personnel killed in ceasefire violation by Pakistan in SECVPF
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Share

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் நான்கு தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.

இச் சம்பவத்தின் போது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்கள் தயாரிப்பு, துப்பாக்கிச்சூடு நடாத்துதல், சாதாரண மக்களை குறிவைத்து கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களாவார்

மேலும் அவர்கள், வர்ஜிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...