gotta
செய்திகள்இலங்கை

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

Share

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும். இவ்வாறு தனது உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய ஒரே வழி தடுப்பூசி ஏற்றிக்கொள்வதாகும்.
தொற்றின் ஆரம்பகட்டத்தில் நாட்டை முடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த முடக்கம் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் அடிக்கடி நாடு முடக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிக சரிந்து உள்ளது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலும், அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.

நாட்டை மீண்டும் முடக்குவதால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மீண்டும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும், நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் செய்கின்றபோதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்கள் பொறுப்பில் இருக்கின்றது. இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்ல. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்படும் அனைத்துத்துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டும். இந்த இக்கட்டான – முக்கியமான தருணத்தில், நாட்டின் அனைத்துத் தரப்பினரும், இந்தத் நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.

ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...