5559
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

Share

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை ஹோட்டல்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் மோசடி இடம்பெறுவதாகவும் அதிகளவு கட்டணங்களை வசூலிக்கும் செயற்பாடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு சில மணிநேரத்துக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...