5559
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

Share

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை ஹோட்டல்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் மோசடி இடம்பெறுவதாகவும் அதிகளவு கட்டணங்களை வசூலிக்கும் செயற்பாடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு சில மணிநேரத்துக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...

pillaiyaaan
இலங்கை

விசாரணைக்கு வரும் பிள்ளையானின் வழக்கு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால், தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை...

red alert
இலங்கை

சற்றுமுன்னர் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு, வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

El Nino
இலங்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நிலவும் வெப்பநிலைமையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு...