இலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Share

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல் தொடர்பான தீர்மானம் ஒரு வார காலத்துள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக நடத்தி முடிக்காமல் போன அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தாமதம் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமடைகின்றன.

இந்த நிலையில் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் சாத்தியங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்கின்றது.

எனவே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதால் பிரச்சினைகள் தோன்றும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...