விளையாட்டுத்துறை
இலங்கைசெய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல்

Share

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவாதம் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஆரம்பமாகும் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் இது தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்விகளை எழுப்ப உத்தேசித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாவுக்காக 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலக அதிகாரிகளுக்காக 67 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

‘ தலைவர் சம்மி சில்வாவுக்கு 11.7 மில்லியன், செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு 5.4 மில்லியன் ரூபா, உப தலைவர்கள் ஜயந்த தரமதாச 5.1 மில்லியன் மற்றும் ரவீன் விக்கிரமரத்ன 4. 7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலகக் கோப்பைக்கான விசா வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

32 வீரர்கள் உட்பட 52 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப விளையாட்டு அமைச்சரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாத 35 நபர்களுக்கான வீசா கோரிக்கை கடிதங்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சம்மி சில்வாவின் மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் உட்பட 21 உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அடங்கியிருந்தாக ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை உப தலைவர் ஜயந்த தர்மதாசவுடன் தொடர்புடைய நடிகை ஷலனி தாரகாவுக்கும் அவுஸ்திரேலியா செல்வதற்கு விசா வழங்குமாறு கோரப்பட்டது.

மேலும், செயற்குழு உறுப்பினர்கள் 8பேரின் மனைவிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேர், இலங்கை கிரிக்கெட் சபையின் ஒன்பது அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிகள் இருவர் மற்றும் மற்றொரு நபர் சார்பாக விசா கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

போட்டியை பார்வையிடச் சென்ற சஞ்சீவ நிசாந்த டி சில்வா நாடு திரும்பவில்லை. அத்துடன் பயணச்சீட்டு கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமையினால், மனித கடத்தல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...