corona death
இலங்கை

மன்னாரில் மேலும் இரு பெண்கள் கொரோனாவால் சாவு!

Share

மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத  72  வயதுடைய மூதாட்டி ஒருவரும், இன்று அதிகாலை தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுக்கொண்ட 78 வயதுடைய மூதாட்டி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

இதேவேளை இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுன. எனவே சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, நானாட்டான் டிலாசார் பாடசாலை, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மறிச்சிக்கட்டி அல் ஜெசிரா பாடசாலை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...

01 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென...

01 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை: தேசிய நீர் வழங்கல் சபை தகவல்!

நாட்டில் அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை...