Corona Treatment 67657
இலங்கைசெய்திகள்

இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை

Share

இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை ஆயுள்வேத வைத்திய சிகிச்சையுடன் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆயுள்வேத வைத்தியசாலைகள் இது தொற்றுக்கு இலவச சிகிச்சை வழங்குகின்றன என கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி இ.சிறிதர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை, திருகோணமலை- கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலை, மட்டக்களப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலை, கிண்ணியா – நடுத்தீவு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைகளில் ஆகியவற்றில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கு நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, குருதி அமுக்க பரிசோதனை, சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட பல வைத்திய பரிசோதனைகளுடன் சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளும் நாளாந்தம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதற்கு ஆயுள்வேத வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் சமூக நல வைத்தியர்களை தொடர்பு கொண்டு, கொவிட் – 19 தொடர்பான வைத்திய ஆலோசனைகளுடன் அதற்கான சிகிச்சை முறைகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்/

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...