image f264974299
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

தெய்வேந்திரமுனையில் சீனாவின் ரேடார் தளம்!!

Share

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பு மற்றும் இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, இலங்கையில் ரேடார்  தளத்தை அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் உட்பட நாட்டின் தென் பகுதியில் உள்ள மூலோபாய சொத்துக்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஏறக்குறைய 1,109 மைல்களுக்கு அப்பால் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை குறித்த ரேடாரால் கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தெய்வேந்திரமுனைக்கு அருகிலுள்ள காடுகளில் சீன விஞ்ஞான  வான்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தில் ஈடுபடலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...