sugar
செய்திகள்இலங்கை

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

Share

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் சொரியாக விற்கப்படும் வெள்ளைச்சீனி 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்டால் 125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை சொரியாக விற்கப்படும் சிவப்பு சீனி125 ரூபாயாவாகவும் பொதி செய்யப்பட்டால் 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பில் கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவிக்கையில்,

முதற்கட்டமாக 20 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் 60 ஆயிரம் கிலோகிராம் வெள்ளை சீனியுமாக 80 ஆயிரம் கிலோகிராம் சீனியையும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் மக்களுக்கு தேவையான சீனியை கூட்டுறவு சங்கங்களினூடாக வழங்கும் நடவடிக்கையில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட சீனி, புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 17 ஆயிரம் கிலோவும், கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 30 ஆயிரம் கிலோவும், ஒட்டுசுட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 2 ஆயிரம் கிலோவும், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 5 ஆயிரம் கிலோவும் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 6 ஆயிரம் கிலோவும் வழங்கப்படவுள்ளது’ – என்றார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...