pcr
செய்திகள்இலங்கை

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

Share

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் காரைநகரில் நூற்றுக்கும் மேற்மேற்பட்டவர்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியதோடு அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சிலர், பி,சி.ஆர். உபகரணங்களை வீசி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...