sugar
செய்திகள்இலங்கை

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

Share

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் சொரியாக விற்கப்படும் வெள்ளைச்சீனி 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்டால் 125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை சொரியாக விற்கப்படும் சிவப்பு சீனி125 ரூபாயாவாகவும் பொதி செய்யப்பட்டால் 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பில் கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவிக்கையில்,

முதற்கட்டமாக 20 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் 60 ஆயிரம் கிலோகிராம் வெள்ளை சீனியுமாக 80 ஆயிரம் கிலோகிராம் சீனியையும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் மக்களுக்கு தேவையான சீனியை கூட்டுறவு சங்கங்களினூடாக வழங்கும் நடவடிக்கையில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட சீனி, புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 17 ஆயிரம் கிலோவும், கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 30 ஆயிரம் கிலோவும், ஒட்டுசுட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 2 ஆயிரம் கிலோவும், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 5 ஆயிரம் கிலோவும் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 6 ஆயிரம் கிலோவும் வழங்கப்படவுள்ளது’ – என்றார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...