இலங்கை
ஐ.நா.பொதுச் செயளர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு
எகிப்தின் கெய்ரோவை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.
இதன் போது 1978இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நேற்று(06) காலை எகிப்து பயணமானார்.
You must be logged in to post a comment Login