1630732190 mohamad 02
செய்திகள்இலங்கைஉலகம்

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி!

Share

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி!

நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று(03) நியூசிலாந்தின் விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியவேளை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த நபர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதில் கொழும்பு சென்று அங்கு கல்வி கற்றுள்ளார். பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Couple Arrested
இலங்கை

மனைவியின் கனவு – போதைப்பொருள் கடத்திய கணவன்.

மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான...