சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி அமைச்சு பட்டியல் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு!

Share

சர்வகட்சி அரசில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அமைச்சுப் பதவிகளை வகிக்கக்கூடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சுகளுக்கான பட்டியலில் மூத்த மற்றும் இளம் உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் பட்டியல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்றும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சாகர காரியவசம் கூறினார்.

சர்வகட்சி அரசின் முக்கிய பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பொறுப்புக்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையாற்றுவது கட்சியின் பொறுப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, நாமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
202002060432067433 Director Gowthaman held for attempt to protest consecration SECVPF
செய்திகள்இந்தியா

திருமலை புத்தர் சிலை விவகாரம்: அநுரகுமார திசாநாயக்க ராஜபக்ச, ரணில் வழியில் பயணிக்கிறாரா? – இயக்குநர் வ.கௌதமன் காட்டம்!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்ட பின், அதை மீண்டும் அதே இடத்தில்...

25 691b53209a165
செய்திகள்இலங்கை

பௌத்தத்தை அழித்து ஈழம் அமைக்கிறதா அரசாங்கம்? – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆவேசம்! மகாநாயக்க தேரர்களுக்கு முக்கிய கோரிக்கை!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றியமை தொடர்பாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள்...

images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...