ஹிருணிகா
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களை விட மோசமான சர்வாதிகாரியே ரணில்!!

Share

” ராஜபக்சக்களை விடவும் மிகவும் மோசமான சர்வாதிகாரியே ‘ரணில் ராஜபக்ச’ என்பவர்.” – என்று விளாசித் தள்ளியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக ஹிருணிக்கா பிரேமசந்திர இன்று சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய இன்று முற்பகல் விசாரணைக்கு வந்த ஹிருணிக்கா, சிஐடி அலுவலகத்துக்குள் செல்வதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். அவ்வேளையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

” போராட்டக்காரர்களின் கருணையால்தான் ரணில், ஜனாதிபதியானார். அந்த போராட்டம் தொடர்பில் விசாரணை நடத்தவே அழைக்கப்பட்டிருப்பதாக நம்புகின்றேன்.

போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாக நானும் இலக்கு வைக்கப்பட்டுள்ளேன். அமைதியாகவே போராடினோம், எமது போராட்டம் ராஜபக்சக்களுக்கு மட்டுமே தலையிடியாக அமைந்தது.

எது எப்படி இருந்தாலும் ஒடுக்குமுறை செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பல்கலைக்கழக மாணவர்கள்கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர். ராஜபக்சக்களைவிடம், மோசமான சர்வாதிகாரியே ரணில், ராஜபக்ச.” – என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...