image 30ecd79d97
அரசியல்இலங்கைசெய்திகள்

மேர்வின் விடுவிப்பு!

Share

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

களனி பிரதேசத்தில் மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பலவந்தமாக நுழைந்து சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...