image 30ecd79d97
அரசியல்இலங்கைசெய்திகள்

மேர்வின் விடுவிப்பு!

Share

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

களனி பிரதேசத்தில் மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பலவந்தமாக நுழைந்து சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...