1599582341 president 2
செய்திகள்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயத் தேவையில்லை!! – ஜனாதிபதி!

Share

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயத் தேவையில்லை!! – ஜனாதிபதி!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன காரணத்துக்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என நீதி அமைச்சர் அலி சப்ரி
தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் ஆக்கப்பட்டார் என்பதைப் பார்க்காது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...