முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும், தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தொடர்பான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சற்றுமுன் முன்னிலையாகியுள்ளார்.
அத்துடன், இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், நாமல் ராஜபக்சவின், வருகையை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் வருகை தந்துள்ளார்.