6b7e6e3e4b7f0f27205a010a6eaa99f35092a93f
செய்திகள்இலங்கை

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

Share

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியைச் சேர்ந்த 98 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனைச் சேர்ந்த 81 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுப் பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...