6b7e6e3e4b7f0f27205a010a6eaa99f35092a93f
செய்திகள்இலங்கை

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

Share

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியைச் சேர்ந்த 98 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனைச் சேர்ந்த 81 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுப் பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...