Selvarasa Gajendran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழருக்கு எதிரான அடக்குமுறை தொடர்கின்றது! – கஜேந்திரன் சுட்டிக்காட்டு

Share

இலங்கை அழிவைச் சந்தித்தாலும் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை வந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தப் போவதில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மூன்று வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் நாட்டு மக்கள் தவிக்கின்றார்கள். நாடு பற்றி எரிகின்றது ஆனால், வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

குறிப்பாக முல்லைத்தீவில் கடற்படை முகாம் ஒன்றை அமைக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏக்கர் காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது பாதுகாப்புப் படையினரால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதன்போது சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்” – என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கஜேந்திரன் எம்.பி. வலியுறுத்தினார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....