ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம்! – ரணில் கோரிக்கை

Share

இலங்கையிலிருந்து எவரும் சட்டவிரோதமாக வெளியேற வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களாகக் கடல் வழியாகச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனவும், அவர்களில் பலர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் கடல் மார்க்கமாகச் சென்ற பலர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி என்ற காரணத்தைச் சொல்லி சந்தேகநபர்களுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இலங்கையிலிருந்து எவரும் சட்டவிரோதமாக வெளியேற வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொள்கின்றது.

இங்குள்ள நிலைமை அவ்வளவுக்கு மோசமடையவில்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” – என்றார்.

இதேவேளை, சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைப் கடற்படை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதற்காகப் பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடிப் படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...