corecatile 1 e1654101337380
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அம்பாறையில் முதலை தாக்கி குடும்பஸ்தர் சாவு!

Share

புல் வெட்டுவதற்காகச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் குறித்த குடும்பஸ்தர் தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் நிந்தவூர் – 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் (வயது 55) என்பவராவார்.

கடற்படையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

ஏழு பிள்ளைகளின் தந்தையாகிய அப்துல் மஜீட் ஹூசைன், ஓர் இசைக் கலைஞனாவார். இவர் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்து விளங்கியதுடன் நிந்தவூர் பிரதேச மக்களால் ‘டோல் மாஸ்டர்’ என அழைக்கப்பட்டார்.

கடந்த வருடம் நிந்தவூர் பிரதேச செயலகத்தால் இவருக்குச் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....