Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசால் பயன் இல்லை! – அநுர வலியுறுத்து

Share

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ராஜபக்ச குடும்பம் அதிகார போதையில் மயங்கியுள்ளது. மஹிந்த உள்ளிட்ட குழுவினரே வன்முறைக்கு வழிவகுத்தனர். ஆதரவாளர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்பதை மஹிந்த ராஜபக்ச தமதுரையில் தெளிவுபடுத்தவில்லை. மோதத் தயார் என்ற தகவலையே அவர் வழங்கினார். எனவே, நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்ச பொறுப்பை ஏற்கவேண்டும். மக்களின் நியாயமான போராட்டங்களை ஆளுங்கட்சியினரே வன்முறையாக மாற்றினர்.

சில ஆயுதங்கள் வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் அலரிமாளிகையில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதலாகும். வன்முறையாளர்கள் காலிமுகத்திடல் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை. போராட்டக்காரர்களை நோக்கியே கண்ணீர்புகைகூட வீசப்பட்டுள்ளது. இதற்கு பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதியால் நாட்டை ஆளமுடியாது. அவரை வைத்துக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதிலும் பயன் இல்லை. எனவே, அவரும் பதவி விலக வேண்டும். சம்பவத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...