Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசால் பயன் இல்லை! – அநுர வலியுறுத்து

Share

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ராஜபக்ச குடும்பம் அதிகார போதையில் மயங்கியுள்ளது. மஹிந்த உள்ளிட்ட குழுவினரே வன்முறைக்கு வழிவகுத்தனர். ஆதரவாளர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்பதை மஹிந்த ராஜபக்ச தமதுரையில் தெளிவுபடுத்தவில்லை. மோதத் தயார் என்ற தகவலையே அவர் வழங்கினார். எனவே, நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்ச பொறுப்பை ஏற்கவேண்டும். மக்களின் நியாயமான போராட்டங்களை ஆளுங்கட்சியினரே வன்முறையாக மாற்றினர்.

சில ஆயுதங்கள் வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் அலரிமாளிகையில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதலாகும். வன்முறையாளர்கள் காலிமுகத்திடல் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை. போராட்டக்காரர்களை நோக்கியே கண்ணீர்புகைகூட வீசப்பட்டுள்ளது. இதற்கு பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதியால் நாட்டை ஆளமுடியாது. அவரை வைத்துக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதிலும் பயன் இல்லை. எனவே, அவரும் பதவி விலக வேண்டும். சம்பவத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...