கோட்டாபய 2
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசு! – ஜனாதிபதி இணக்கம்

Share

” இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளார். இது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். 6 யோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

இதற்கு ஜனாதிபதி உடனடி பதிலை வழங்கவில்லை. இதனால் மகாநாயக்க தேரர்களும், மகா சங்கத்தினரும் கூட்டு சங்கப் பிரகடனமொன்றை வெளியிட தீர்மானித்தனர்.

இந்நிலையில் மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில்தான் மேற்படி உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...