photo 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயாதீன எம்.பிக்களுடன் சீனத் தூதர் அவசர பேச்சு!

Share

நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் உறுப்பினர்களில் 7 பேருடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் அவசர சந்திப்பு நடத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது எனக் கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, அத்துரலிய ரத்ன தேரர், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.

இதேநேரம், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தத் தொடர்ந்தும் சீனா தமது உதவிகளை வழங்கும் என அந்த நாட்டுப் பிரதமர் லீ குயாங்க் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....