photo 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயாதீன எம்.பிக்களுடன் சீனத் தூதர் அவசர பேச்சு!

Share

நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் உறுப்பினர்களில் 7 பேருடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் அவசர சந்திப்பு நடத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது எனக் கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, அத்துரலிய ரத்ன தேரர், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.

இதேநேரம், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தத் தொடர்ந்தும் சீனா தமது உதவிகளை வழங்கும் என அந்த நாட்டுப் பிரதமர் லீ குயாங்க் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...