சுசில் பிரேமஜயந்த
அரசியல்இலங்கைசெய்திகள்

சுசிலுக்கும் வலை விரிக்கின்றது கோட்டா அரசு!

Share

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில் பிரேமஜயந்த பங்கேற்ற போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே அவரை வளைத்துப்போடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சுசில் பிரேமஜயந்த பச்சைக்கொடி காட்டினால், எதிர்வரும் 18ஆம் திகதி பதவியேற்கவுள்ள அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...