சுசில் பிரேமஜயந்த
அரசியல்இலங்கைசெய்திகள்

சுசிலுக்கும் வலை விரிக்கின்றது கோட்டா அரசு!

Share

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில் பிரேமஜயந்த பங்கேற்ற போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே அவரை வளைத்துப்போடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சுசில் பிரேமஜயந்த பச்சைக்கொடி காட்டினால், எதிர்வரும் 18ஆம் திகதி பதவியேற்கவுள்ள அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...