z p03 Tissa
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டுப் பொறுப்பற்ற அரசு இது! – திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு

Share

தற்போதைய அரசிடம் கூட்டுப் பொறுப்பு என்பது சற்றும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

இந்த அரசில் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்களே தவிர தமது பொறுப்பை உணரவில்லை.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில், மின்சக்தி அமைச்சர் எரிசக்தி அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.

எரிசக்தி அமைச்சரால் எரிபொருள் விநியோகம் செய்ய முடியாத நிலையில், அவர் மின்வலு அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.

இருவரும் தமது பணிகளை சரியாக செய்யாது, மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் செலுத்துகின்றனர். நாயின் வேலையை கழுதை செய்வதாகவும், கழுதையின் வேலையை நாய் செய்வதாகவுமே இதனை கருத வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...