CEB
செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள்! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்

Share

பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு மின்சார சபைக்கு விடுவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து மின்சார சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற்று இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபைக்கான மின்சார விநியோகத்தை எவ்வித வெட்டுக்கள் இன்றியும் பேண முடியும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறானதொரு நிலை இருப்பின் தமக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாளை (25) முதல் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒன்றரை மணிநேரமும் மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலைமையை தடுக்கும் வகையில் மின்சார முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...