CEB
செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள்! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்

Share

பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு மின்சார சபைக்கு விடுவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து மின்சார சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற்று இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபைக்கான மின்சார விநியோகத்தை எவ்வித வெட்டுக்கள் இன்றியும் பேண முடியும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறானதொரு நிலை இருப்பின் தமக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாளை (25) முதல் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒன்றரை மணிநேரமும் மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலைமையை தடுக்கும் வகையில் மின்சார முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...