zePBjZACouwfRR7I6vibtlity9Bo4v4J
செய்திகள்இலங்கை

இலங்கையர்களுக்கு மாலை 6 மணி வரை காலக்கெடு! – அதிர்ச்சியில் மக்கள்

Share

இன்று மாலை 6 மணிக்கு பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இரண்டு மின் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் நாடு இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 63 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த நிலையில், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...