ROHITHA 1
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் !

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பாரிய பாரம்பரியக் கட்சியாகும். அக்கட்சியை 2015 ஜனவரி மாதம் சிறிகொத்தவுக்கு கொண்டுசென்று, ஐக்கிய தேசியக்கட்சியிடம் அடகு வைத்தவர்தான் மைத்திரிபால சிறிசேன. அதனால்தான் சுதந்திரக்கட்சி சீரழிந்தது. அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் ஒருமுறை சஜித்திடம் சென்று, கட்சியை சரணடைய வைக்க பார்க்கின்றார். மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாக இருந்தார். அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களே அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டுமெனில் அக்கட்சியை முதலில் மைத்திரியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...