ROHITHA 1
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் !

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பாரிய பாரம்பரியக் கட்சியாகும். அக்கட்சியை 2015 ஜனவரி மாதம் சிறிகொத்தவுக்கு கொண்டுசென்று, ஐக்கிய தேசியக்கட்சியிடம் அடகு வைத்தவர்தான் மைத்திரிபால சிறிசேன. அதனால்தான் சுதந்திரக்கட்சி சீரழிந்தது. அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் ஒருமுறை சஜித்திடம் சென்று, கட்சியை சரணடைய வைக்க பார்க்கின்றார். மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாக இருந்தார். அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களே அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டுமெனில் அக்கட்சியை முதலில் மைத்திரியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...