death
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

Share

சீமெந்து தரையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நிரஞ்சலராசா சரணிகா (வயது-19) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 29 ஆம் திகதியன்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீட்டின் சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்போது வீட்டின் வரவேற்பு பகுதியில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த அவரை உறவினர்கள் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

deathh

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...