Annalingam annarasa
இலங்கைகாணொலிகள்செய்திகள்பிராந்தியம்

இந்திய மீனவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர்!!

Share

யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அத்துமீறிய இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளது.

இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தீவகப் பகுதிகளில், அத்துமீறிய இரட்டை இழுவை மடிப்படகுகளைப் பயன்படுத்தி, இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து கைது செய்கின்றனர் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர்.

இந்திய மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...