image 1531977056 33813cf8fa
செய்திகள்இலங்கை

நிவாரணப் பொதி விநியோகிக்கும் சதொச!!

Share

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த நிவாரணப் பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் , வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பந்துல குணவர்த்தன உரையாற்றுகையில் , பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய விற்பனை நிலையங்களை காட்டிலும் சதொச விற்பனை நிலையத்தில்அத்தியாவசிய பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .

பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை இதுவரை காலமும் சதொச நிறுவனம் ஊடாக முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு 8 பிரதான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்  பொதியை 1998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருட்களை வாங்கும்போது 95 ரூபா பெறுமதிமிக்க பப்படம் பொதியொன்று இலவசமாக வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...