Mahinda
இலங்கைஅரசியல்செய்திகள்

எரிவாயுப் பிரச்சினை: மஹிந்த எடுத்த முடிவு

Share

சமையல் எரிவாயு வெடிப்புத் தொடர்பாகவும், எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

லிட்ரோ கேஸ், லாப் கேஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு வெடிப்பு சம்பந்தமான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட குழுவினர், நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மேலும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அதிகாரிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும்  இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்புகளுக்கான காரணம், அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளன என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...