e65c08bd652f5870b0a7c15f80a13a37 XL
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு செக் வைத்த யாழ் முதல்வர்!!

Share

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று வெளியிட்ட மாநகர முதல்வரின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1.தனியார் பேருந்து சேவையின் உள்ளூர், வெளியூர் சேவைகள், கொழும்பிற்கான இரவு நேர சேவைகள் நீண்ட தூர பஸ் நிலையத்தில் இருந்து எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும்

2.தனியாரின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அதேபோல் வெளி இடங்களிலிருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கப்படுவார்கள் என்றும்

3.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரசந்தியை அடைந்து அங்கிருந்து கேகேஎஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளி மாவட்டங்களுக்கான பயணத்தை மேற்கொள்ளும்

வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் அதே பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்கு முறைஉடனடியாக நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்றும்

4.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படி சந்திக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு அறியத் தருவதாக  குறித்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

WhatsApp Image 2021 12 09 at 6.56.49 PM

 

#SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...