courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் தடை : பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது மன்னார் நீதிமன்று

Share

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி மன்னார் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், மன்னார் நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

நாளைய தினம் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது என தெரிவித்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று தாக்கல் செய்யப்பட விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்ட நீதவான், தகுந்த சாட்சிகள் இல்லை என தெரிவித்து குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராகவே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...