speaker mahinda yapa abeywardena 700x375 1
செய்திகள்அரசியல்இலங்கை

அதியுயர் சபையில் பெண்களை அவமதித்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கிறார் சபாநாயகர்!

Share

அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (23) அமர்வை ஆரம்பித்து வைத்தபோதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு  தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, பாராளுமன்றத்தில் இல்லாத மற்றொரு பெண் ஆகியோரை, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அதியுயர்சபையில் அவமதிக்கும் வகையில் பேசியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகர் என்ற வகையில் நான் ஆழமாக ஆராய்ந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

திஸ்ஸகுட்டியாராச்சி எம்.பியின் உரை தொடர்பில் நான் கவலையடைகிறேன். அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம்.

பெண்களை அவமதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெற்றால், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் எச்சரித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...