Mullaithivu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் முல்லைத்தீவு!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள வீதித் தடைகளிற்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மாவீரர் துயிலுமில்லங்களைச் சூழவும் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தண்ணீர்ஊற்றுசந்தி, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காணப்படும் சுமார் 15 இற்கும் மேற்பட்ட வீதிதடைகளில் வீதியால் பயணிப்பவர்கள் தீடீர் சோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குள் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் தேராவில் துயிலும் இல்லங்கள் என மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களை அண்மித்த வீதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...