Mullaithivu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் முல்லைத்தீவு!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள வீதித் தடைகளிற்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மாவீரர் துயிலுமில்லங்களைச் சூழவும் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தண்ணீர்ஊற்றுசந்தி, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காணப்படும் சுமார் 15 இற்கும் மேற்பட்ட வீதிதடைகளில் வீதியால் பயணிப்பவர்கள் தீடீர் சோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குள் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் தேராவில் துயிலும் இல்லங்கள் என மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களை அண்மித்த வீதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...