Ravichandran
செய்திகள்இந்தியாஇலங்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோலா?

Share

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளியில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளியில் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே நாளை பரோலில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதற்காக மதுரையில் இருந்து தரை வழிப் பயணமாக கன்னியாகுமாரி சென்றிருந்தார்.

ஆகவே பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி ரவிச்சந்திரன் நாளை பரோலில் விடுவிக்கப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#IndiaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....