Ravichandran
செய்திகள்இந்தியாஇலங்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோலா?

Share

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளியில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளியில் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே நாளை பரோலில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதற்காக மதுரையில் இருந்து தரை வழிப் பயணமாக கன்னியாகுமாரி சென்றிருந்தார்.

ஆகவே பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி ரவிச்சந்திரன் நாளை பரோலில் விடுவிக்கப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#IndiaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...