photo4jpg
செய்திகள்இந்தியா

குளத்தில் மூழ்கிய கார்- 4 பேர் சாவு

Share

நேபாளத்தில் கார் குளத்தில் மூழ்கி 4பேர் சாவடைந்துள்ளனர்.

நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் வீதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேதி யோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த 4 பேரும் சாவடைந்துள்ளனர் .

சாவடைந்தவர்கள் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினாநாத் (25), அருண் (30), திலிப் (28), அமித் (27) என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் இந்தியர்கள் சாவடைந்ததை குறித்து ரவுதகத் காவல்துறை இந்திய காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தது.

அதன்பின்னர் சாவடைந்த உறவினர்கள் இன்று காலையில் வந்து உடல்களை அடையாளம் காட்டினர். குளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது.

விபத்து குறித்து நேபாள பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...